சுவர் எழுப்பினாலும் தப்பி ஓடுவோம்லே!மீண்டும் மீண்டும் டிமிக்கி கொடுக்கும் சிறார் குற்றவாளிகள்!

சுவர் எழுப்பினாலும் தப்பி ஓடுவோம்லே!மீண்டும் மீண்டும் டிமிக்கி கொடுக்கும் சிறார் குற்றவாளிகள்!
சுவர் எழுப்பினாலும் தப்பி ஓடுவோம்லே!மீண்டும் மீண்டும் டிமிக்கி கொடுக்கும் சிறார் குற்றவாளிகள்!

 ஜி.கே.சேகரன்,

 வேலூர் காகிதப்பட்டரை பகுதியில்க் சிறார்களுக்கான அரசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள பல்வேறு குற்ற பின்னணெணி கொண்ட சிறார்கள் தப்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.

 இதனால் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆ.ஜி.ஆனந்த் மற்றும் ஆட்சியர், எஸ்.பி.என பல ஆய்வுகளை நடத்தி அந்த இல்லத்தின் சுற்று சுவரின் உயரத்தை உயர்த்தினர். அப்போதும் கூட தற்போது ஏழு பேர் தப்பியோடிவிட்டார்கள்.

 வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறார் குற்றவாளிகள் 7  பேர் தப்பி ஓட்டம் பிடித்த நிலையில், அவர்களில் இரண்டு பேர் பெருமுகை அருகே பிடிபட்டனர், மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  வேலூர் காகிதப்பட்டறையில் சமூகநலத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம்  பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்படும் சிறுவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் அடைக்கப்படுவர்.

 இந்நிலையில் தற்போது 42 பேர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் ஏழு பேர் தப்பினார்கள்.

 இப்படிதான், கடந்த மாதம் இந்த இல்லத்தில் இருந்த சிறுவர்கள் ரகளை ஈடுபட்டனர். அப்போது 6 பேர் தப்பி ஓடினர் அதில் ஐந்து பேரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி பிடித்தனர்.

  ஒருவர் இன்னும் தலைமறைவாக  உள்ளார்.

   அதே போல், கடந்த வாரம் மீண்டும் ஐந்து பேர் இல்லத்தில் இருந்து தப்பி சென்றனர்அவர்களை வேலூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

   இதன் காரணமாக இல்லத்தின் சுற்று சுவர்கள் உயரம் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

  இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் இல்லத்தில் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டனர்.

   நள்ளிரவில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பி பிளாக்கில் தங்க வைக்கப்பட்டிருந்த ஏழு பேர் தப்பி செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர்.

   அவர்கள் பி பிளாக் கட்டிடத்தின் பாத்ரூம் ஜன்னல் வழியாக வெளியே வந்தனர். பின்னர்  சுற்றுச்சுவர் கம்பி மீது ஏறி குதித்து தப்பி உள்ளனர்.

  இரவு நேர ரோந்தின் போது சிறுவர்கள் தப்பிச் சென்றதை பாதுகாவலர்கள் அறிந்தனர்.

  உடனடியாக இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுது.

   தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், துணைசூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் தப்பியோடிய இளைஞர்களை தேடும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டனர்.

  அப்போது சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெருமுகை அருகே சென்ற இரண்டு சிறார்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்அவர்களை மீண்டும் பாதுகாப்பு இல்லத்திற்கு கொண்டு வந்தனர்.

   வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வேலூர் புதிய பஸ் நிலையம் காட்பாடி ரயில் நிலையங்களிலும் சோதனை கொண்டு வருகின்றனர்.

 சிறுவர்களின் சொந்த ஊர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

  அரசு பாதுகாப்பு இல்லத்தில் தொடர்ந்து சிறுவர்கள் தப்பியோடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.