கஞ்சா  சாக்லேட் விற்றவன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

கஞ்சா  சாக்லேட் விற்றவன் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது!

 ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,

 கஞ்சா சாக்லேட் விற்றவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, அதற்கான நடவடிக்கை எடுக்க எஸ்.பி. மற்றும் ஆட்சியர் உத்தரவிட்டனர்.

  கோவை மாவட்டம்,  பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மாதோ என்பவரது மகன் திலிப்குமார் (38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக திலிப்குமார்  மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார்.

 அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட  நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

 அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு குற்றவாளியான திலீப்குமார் (38) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

 மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 11 நபர்கள்  மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  இதில் 5 நபர்கள் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.