காவலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை!

காவலர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை!

 ஜி.கே.சேகரன்,

  மன உளைச்சல் காரணமாக காவலர் தற்கொலை செய்துக் கொண்டார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் விக்னேஷ் (26)   விக்னேஷ் காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து 1 மாதங்கள் ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

   அவருக்கு மூளையில் வியாதி ஏற்பட்டு வேலுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்நிலையில் அவர் நேற்று வீட்டிலிருந்து  புறப்பட்டு  காஞ்சிபுரத்துக்கு காவலர் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார்.

 பின்னர் நேற்று மாலை காவல் பயிற்சி பள்ளியில் இருந்து தனது சொந்த ஊருக்கு கிளம்பி வந்த அவர், வாலாஜா டோல்கேட்டில் இறங்கி அவரது அப்பா ஏழுமலைக்கு தொலைபேசி மூலம் தன்னிடம் இருக்கும் குறைபாடு மற்றும் வியாதி பற்றிரழுதுக் கொண்டே கூறியுள்ளார்.

   பின்னர்  அருகே இருக்கும்  காலி மனைக்கு சென்று மரத்தில்  தூணியால் துக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பிறகு விக்னேஷின் அப்பா ஏழுமலை வேகமாக வாலாஜா டோல்கேட் புறப்பட்டு வந்த அவர்  மகனை அங்கு சுற்றி தேடி வந்துள்ளார்.

  பிறகு வாலாஜா போலீசாருக்கு தகவல்  தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் டோல்கேட் அருகே இருந்த காலிமனைக்கு சென்ற போலீசார்  ஒரு மரத்தில் துக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.