ஆயிரம் குற்றவாளிகளிடம் ஜாமின் பத்திரம்! ரூ.10 கோடி சொத்து முடக்கம்! வங்கி கணக்குகள் அம்பேல்:- கஞ்சா வேட்டையில் தீவிரம் காட்டும் ஐ.ஜி.அஸ்ராகர்க்!

ம.பா.கெஜராஜ்,
கஞ்சா விற்பனை செய்யாமலிருக்க ஆயிரம் குற்றவாளிகளிடம் ஜாமின் பத்திரம் பெற்ற தோடு, ரூ.10 கோடி சொத்துக்களை முடக்கம் செய்து, வங்கிகணக்குகளை செயலிழக்க செய்திருக்கிறார் ஐ.ஜி.அஸ்ராகர்க்!
இது பற்றின விவரம் வருமாறு,
தென் மண்டல ஐ.ஜி.யாக இருப்பவர் அஸ்ரா கர்க். இவரது உத்தரவின் பேரில், தென் மாவட்டங்களில் கஞ்சா, போதை வஸ்துகள் விற்பனையை ஒழிக்க ஆயிரம் குற்றவாளிகளிடம் நன்னடத்தை ஜாமின் பத்திரம் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க போலீஸ் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.ரந்த வகையில் தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் உத்தரவின்படி 3 மாதங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் விசாரணை முடிந்து வீடு, மனை, நிலம் உட்பட ரூ.10 கோடி அசையா சொத்துக்கள், எட்டு வாகனங்கள், 18 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் மட்டுமல்லாமல் அவர்களின் சந்தேகத்திற்குரிய உறவினர்களின் வங்கிக் கணக்குகளையும் அவர் முடக்க பரிந்துரைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது வரை தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1450 வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கினர்.
மேலும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின்படி நன்னடத்தைக்கான ஜாமின் பெறப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுவாக நன்னடத்தைக்கான ஜாமின் பத்திரம் ரவுடிகள், சந்தேக குற்றவாளிகள் மீது பெறப்படும். இச்சட்டம் கஞ்சா குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களில் 1000 நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிபதிகள் முன் ஆஜர் செய்து நன்னடத்தை ஜாமின் பத்திரம் பெறப்பட்டதுள்ளது.
அந்த வகையில் மதுரை -142, திண்டுக்கல் -186, தேனி - 271, ராமநாதபுரம் - 87, சிவகங்கை - 30, விருதுநகர் -81, திருநெல்வேலி - 43, தென்காசி - 32, து?த்துக்குடி - 104, கன்னியாகுமரி - 24 நபர்களிடம் பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜாமின்பத்திரம் அளித்திருப்பவர்களை போலிசார் தொடர்ந்து கண்காணிப்பார்கள். அவர்கள் ஜாமின் பத்திர விதிகளை மீறினால் கைது செய்யப்படுவார்கள்.
இதே அஸ்ரா கர்க் எஸ்.பி.யாக இருந்த போது கணவனை கொன்ற மனைவியை ஸ்டேஷன் ஜாமினில் அனுப்பிவைத்து அதற்காக சட்டத்தின் குறியீடுகளை வரிசைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.