அய்யோ:- நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமாம்: காஞ்சி கலெக்டர் பேச்சு!

அய்யோ:- நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமாம்: காஞ்சி கலெக்டர் பேச்சு!

 காஞ்சி.கோட்டீஸ்வரன்,

 நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கூறியிருக்கிறார்.

 இது பற்றி விவரம் வருமாறு,

 காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

   அந்தக்கூட்டத்தில் நீர்நிலைகளை மறுசீரமைத்தல் தொடர்பான இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:- தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவேண்டும். மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்த வேண்டும்.

  தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமை போர்வையை அதிகப்படுத்த வேண்டும்.

 தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி முறையாக கையாளவேண்டும்.

 தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

 தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என்று பேசினார். இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 ஆனால் இந்த மாவட்டத்தில் தான் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சேதப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.