நீட்தேர்வை எதிர்த்து மாவட்ட ஊராட்சியில் தீர்மானம்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டமானது நடைபெற்றது, அதில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டமானது வேலூர் மாவட்ட ஊராட்சியின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நடந்த மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திற்கு மின் இணைப்பு செலவீனம் மற்றும் குடிநீருக்காக செலவிட்ட தொகைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியதொகைகள் கணினி பழுது பார்த்தல் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் சில்லரை செலவீனங்களை கணக்குகாட்டியும் நீட் தேர்வை ரத்து செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.