கிச்சனாக மாறிய ஆட்சியர் அலுவலகம்!

க.பாலகுரு,
திருவாரூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தினர் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வெளியிட வேண்டும், பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 456 வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் 9 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டம் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.