ரம்ஜானுக்கு கறி வாங்க பணம் - பட்டை லவங்கம் கொடுத்த திமுகவினர்!

ரம்ஜானுக்கு கறி வாங்க பணம் - பட்டை லவங்கம் கொடுத்த திமுகவினர்!

 ஜி.கே.சேகரன்,

 திமுக சார்பில் 5071 பேருக்கு ரம்ஜான் கொண்டாட அரிசி மற்றும் பூண்டு,நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் தலா ரூ.200 பணம் என மொத்தம் ரூ,.40 லட்சம் மதிப்பில் பொருட்கள் பணம் ஆகியவைகளை வேலூர்  சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்ததை  - வேலூர் எம்பி கதிர் ஆனந்த் மக்களுக்கு வழங்கினார்.

  வேலூர்மாவட்டம், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் அவரது சொந்த செலவிலும், தலைமையிலும் 5071 இஸ்லாமிய மக்களுக்கு அரிசி, பூண்டு, நெய், பட்டை லவங்கம், வெங்காயம், உள்ளிட்ட 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது.

  ஒவ்வொரு இஸ்லாமிய மக்களும் ரம்ஜானுக்கு கறி வாங்க தலா ரூ.200 என ரூ. 10 லட்சம் பணமும் சேர்த்து   மொத்தம் ரூ,.40லட்சம் மதிப்பிலான பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.

  தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு முன்னாள் இவை வழங்கப்பட்டது.

 இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மக்களுக்கு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவைகளை வழங்கினார்.

  இவ்விழாவில் மேயர் சுஜாதா ,மற்றும் முன்னாள் எம்.பி சகி, மாமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரையில் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.