அம்மாவின் டெல்லி காருக்கு ஓபிஎஸ். குறியா?

ம.பா.கெஜராஜ்,
அதிமுக வின் நிரந்தர பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெ.ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்தி வந்த டெல்லி காரை ஓ.பி.எஸ். பயன்படுத்த குறி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இது பற்றி கூறப்படுவதாவது
கடந்த 1980 களில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பியாக இருந்த ஜெயலலிதா, டெல்லியில் மாருதி கார் ஒன்றை வைத்திருந்திருந்தார். எம்ஜிஆரின் மறைவுக்கு பின்னர் அவர் தமிழக அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்ததால், டெல்லி பக்கம் அவ்வளாக போகவில்லை. ஆனால் அவர் எம்பியாக இருந்தபோது பயன்படுத்திய கார் மட்டும் இன்னும் டெல்லியிலேயே இருக்கிறதாம்.
முன்பு ராஜ்சபா எம்பியாக இருந்த மைத்ரேயன் ஜெயலலிதாவின் காரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதனை அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக உள்ள தம்பிதுரை வைத்துள்ளாராம்.
அப்படியிருக்க டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அதிமுக அலுவலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு ஜெயலலிதா பயன்படுத்தி பொருட்களை கண்காட்சியாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த பொருட்களுடன் ஜெயலலிதாவின் மாருதி காரும் அங்கு காட்சி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா பயன்படுத்தியது என்ற பெருமை வாய்ந்த இந்த காரையும், புதிய கட்சி அலுவலகத்தையும் தன்வசப்படுத்த ஓபிஎஸ் தற்போது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக தம்பிதுரை இருப்பதால் அந்த காரை ஓ.பி.எஸ். கைப்பற்றுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை என்றாலும் கூட, ஜெயலலிதா ராஜ்யசபா எம்பியாக இருந்தபோது வைத்திருந்த கார், கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஓ.பி.எஸ்.சின் ஆசையை தூர வீசக்கூடும்.