நோய் தீர்க்கும் மருந்தை போதை வஸ்தாக்கிய ஐவர் கைது! பின்னணி யார்?

நோய் தீர்க்கும் மருந்தை போதை வஸ்தாக்கிய ஐவர் கைது! பின்னணி யார்?

ஜி.சாந்தகுமார்,

 சென்னையில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக அவர்களுக்கு க்கு தகவல் கிடைத்தது.

 இதையடுத்து போலீஸ் டீம் அங்கு சென்று அந்த 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

 பின்னர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4,400 மாத்திரைகள் மற்றும் 90 டானிக்குகள் இருந்தன. வலி மற்றும் சளி போன்றவற்றிற்காக வழங்கப்படும் இந்த மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி அந்த பகுதியில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

 இதையடுத்து இது தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் சுல்தான் அலாவுதீனும் நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

 இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை பறிமுதல் செய்தனர்.

 நோய் தீர மருந்து தயாரித்தால் அதையே போதைக்காக பயன்படுத்த இவர்களை இயக்கியவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் அவா?