குடிகார சூப்பரவைசர்!

  ஆ.ராஜேஷ்குமார்,

  அரசு அலுவலகத்தில் அமர்ந்து ஹாயாக சரக்கு அடிக்கும் அலுவலர் தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

 தாம்பரம் மாநகராட்சி சி பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் சூப்பர்வைசர் வி.ராகவன் என்பவர் அரசு அலுவலகத்தை சரக்கடிக்கும் பார் ஆக உபயோகப்படுத்தி வருகிறார்.

 மேற்படி  ராகவன் தினமும் பகலில் அலுவலக இருக்கையில் அமர்ந்து சரக்கு அடித்துவிட்டு அவருடன் பணியாற்றும் ஆட்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்.

 துட்டு கொடுக்காமலேயே சைடிஸ் தட்டி கொண்டு வரச்சொல்கிறாராம்.

 பொது மக்களுக்கும் அதே கதிதான்.

 மேலதிகாரிகள் அவர் மீது கவனம் வைத்தால் நலம்.