2,500/-கோடியுடன் கம்பி நீட்டிய இன்னொறு பைனான்ஸ்?!
ம.பா.கெஜராஜ்,
அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகும் பைனான்ஸ்களைக் குறித்து, அரசாங்கம் தரப்பில் என்ன தான் விழிப்புணர்வு கொடுத்தாலும், மக்கள் அந்த பாழும் கிணற்றில் தொடர்ந்து விழுந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சில பத்திரிகைகளும் மக்களின் ஆசையை தூண்ட உதவுவதே இதற்கு முக்கிய காரணம்.
சரி விஷயத்துக்கு வருவோம்,
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகர எல்லைக்குட்பட்ட, காட்பாடி காந்தி நகர் கிழக்கு பகுதியில், இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் என்கிற ஒரு நிதி நிறுவனத்தை சகோதரர்கள் இருவர் தொடங்கி நடத்திவந்தனர். ஜனார்த்தனன் மற்றும் லட்சுமிநாராயணன் சுந்தரம் என்பது தான் அந்த சகோதரர்களின் பெயர்கள். இதுல எவர் மூத்தவர் என்கிற விவரம் தெரியவில்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பொது மக்களிடம் டெபாசிட் பணம் பெற்றுக்கொண்டு டெபாசிட்தாரர்களுக்கு தவறாமல் வட்டி செலுத்தி வந்தனர். இதையறிந்த லட்சக்கணக்காணோர், அந்த சகோதரர்களை நம்பி சுமார் 2,500/ கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர்கள் கம்பி நீட்டிவிட்டனராம், அதாவது எஸ்கேப் ஆகிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது..
இத்தனைக்கும் டெபாசிட் பெறுவதற்கோ, வட்டி கொடுப்பதற்கோ அவர்கள் அரசிடம் எந்த அனுமதியையும் பெறவில்லையாம்.
அப்படியிருக்க, தற்போது அந்த பைனான்ஸ் நிறுவனம் இரண்டு நாட்களாக மூடப்பட்டிருக்கிறது. ஆனால் சுமார் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து சமீபத்தில் காட்பாடி, வி.ஜி.ராவ் நகரில் பங்களா ஒன்று வாங்கி போட்டனர். அங்கு மட்டும் தனியார் செக்யூரிட்டிகளை போட்டு வைத்துள்ளார்களாம்.
மற்றபடி அந்த குரூப்பின் சந்தடி தெரியவில்லை, அவர்களது நெருங்கிய உறவினர்களையும் தலைமறைவு செய்துள்ளதாக தகவல்.
இதே நேரத்தில் ஜனார்த்தனனை அமலாக்கபிரிவினர் நேற்று கைது செய்து, பாகாயம் காவல் நிலையத்தில் வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவரது சகோதரர் லட்சுமிநாராயணன் சுந்தரத்தின் செல் போன் ஹைதராபாத்தில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறதாம்.
இந்த கம்பெனி ஓட்டம் பிடிக்கப்போவுது என்று ஏற்கனவே ஆனந்த சீனிவாசன் என்கிற பொருளாதார மேதை வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து இந்திய பங்கு சந்தையின் நாஸ்ட்ரோடாம் என்று இந்த சீட்டிங் சகோதரர்களைப் பற்றி ஆங்கில நாளேடு ஒன்று புகழ்ந்து தள்ளியதாம்.
இப்படியெல்லாம் பல்வேறு வேலைகளை செய்து பலரை கவர்ந்திழுத்துள்ளார்கள்.
நின்று நிதானமாக செய்யல்பட்டு சுமார் 2,500/ கோடி ரூபாவை அபேஸ் செய்ததாக கூறப்படும் நிலையில் இந்த சீட்டிங் சகோதரர்களுக்கு உள்ளூர் இன்ஸ்பெக்டர் உதவி செய்ய வேண்டும் என ஒரு ஐபிஎஸ் அதிகாரி அவரை நியமித்திருப்பதாகவும் தகவல்.
எது எப்படியோ கத்திரிக்காய் முத்தினால் கடைவீதிக்கு வந்துதானே ஆகவேண்டும்.
இந்த பண மோசடி சம்பவத்தில் வேலூரில் உள்ள பெரிய செல்வந்தர்கள் பலர் சிக்கியிருக்கிறார்கள், தற்போது அவர்கள் பணம் வருமா வராதா என வேண்டாத தெயவம் இல்லை, என்ன செய்வது உள்ளூர் திமுக எம் .எல் .ஏ ஒருவர் அந்த சகோதரர்களுக்கு சப்போர்ட் இருக்கிறாராம்.
இருந்த போதும் தற்போது ஏற்பட்டிருப்பது ஒரு சின்ன இடையூறுதான், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இவர்களுடைய ஏஜெண்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.
பைனான்ஸ் தரப்பில் உண்மை நிலவரத்தை அறிய முற்பட்டோம், ஆனால் அலுவலகம் மூடப்பட்டிருப்பதால் அது இயலவில்லை. இருப்பினும் அவர்கள் தரப்பு விவரங்களை அதிகாரபூர்வமானவர்கள் அளிக்க முன்வந்தால் அது குறித்து பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.
.