தொடரும் நீட் தேர்வு தற்கொலை!

தொடரும் நீட் தேர்வு தற்கொலை!

.  தொடரும் நீட் தேர்வு தற்கொலை!

   கதிர்,

    

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் என்பவரின் மகன் தனுஷ் (20). ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று 3-வது முறையாக தேர்வை எழுத இருந்தார்.

 

  இரவு 1 மணிவரை தந்தையுடன் பேசிக்கொண்டிருந்த தனுஷ், அதன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வின் அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.