லஞ்சம் வாங்கிய விஏஓ லபக் என்று பிடிபட்டார்!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டம், பேரளம் கிராம நிர்வாக அலுவலர், லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருவாரூர் மாவட்டம், பேரளம் கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ். இவரிடம் பட்டா மாறுதலுக்காக பயனாளி முகமது என்பவர் சென்றுள்ளார்.
இந்நிலையில் விஏஓ தேவதாஸ் முகமது விடம் எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பயனாளி முகமது, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தகவல் அளித்துள்ளார்.
அதன்படி திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் பயனாளி முகமதுக்கு ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்துள்ளார்.
அதன்படி நந்தகோபால் மற்றும் அவருடைய குழு அங்கு சென்றது. அப்போது பயனாளி பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் பொழுது கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.