ரயில் மீது ஏறி வந்த மர்ம நபரால் பரபரப்பு!
கு.அசோக்,
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சரக்கு ரயில் மீது ஏறி வந்த மர்ம நபரால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்மாவட்டம்,வாணியம்பாடி ரயில் நிலையம் நோக்கிசென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் சரக்கு ரயில் காலை 6 மணிக்கு வந்துகொண்டிருந்த போது சரக்கு ரயில் மீது மர்ம நபர் ஒருவர் ஏறி வருவதை பலர் பார்த்து அதிர்ந்தனர்.
உடனே விண்ணமங்கலம் ரயில்வே நிலைய அலுவலர் உஷாராகி வாணியம்பாடி ரயில்வே நிலை அலுவலருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் வாணியம்பாடி ரயில்வே நிலைய அலுவலர் சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பேரில் விண்ணமங்கலத்திலிருந்து கேத்தாண்டப்பட்டி வரை செல்லும் ரயில்வே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் வாணியம்பாடி இரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிற்கவைத்தனர். அப்போது பொதுமக்கள் மூலம் அந்த நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனால் சென்னை பெங்களூரு மார்க்கம் வழியாக செல்லும் ரயில் போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது
சரக்கு ரயில் மீது மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் ஏறி வந்த சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது