ராஜிவ் கொலையாளிக்கு மருத்துவ சிகிச்சை!

கு.அசோக்,
ராஜிவ் கொலையாளி பேரறிவாளன் பரோலில் உள்ள நிலையில் இன்று ஜோலார்பேட்டை வீட்டிலிருந்து அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து பரிசோதனை
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கடந்த மூன்று மாதகாலமாக பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார்.
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு உடல் நலனுக்கு குறைவு ஏற்பட்டு சிறுநீரக தொற்றின் காரணமாக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு எம்.ஆர் ஐ ஸ்கேன்,சிடி,ஸ்கேன் ,ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் மருத்துவரை சந்தித்த பின்பு பேரறிவாளன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்பேட்டை இல்லத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.