வினாத்தாள் லீக் ஆனதா?நடத்தாத பாடத்துக்கு தேர்வெழுத வைத்த ஸ்பார்க் பள்ளி! மன உலைச்சலில் மாணாக்கள்

கு.பிரணேஷ்,

 வேலூர் மாவட்டம்,  வேலூர் அடுத்த அரியூரில் ஸ்பார்க் என்கிற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் நிர்வாகி குபீரென்று உயர்ந்து கல்வி தந்தையானவர். அவர் நடத்தும் பள்ளியில் அவ்வப்பொழுது சர்ச்சைகள் எழுவதுண்டு.

  அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ பாடப்பிரில் பயிலும் சுமார் 37 மாணாக்களின் எதிர்கால நலனுக்கு வேட்டு வைக்கும் விதமாக அந்த நிர்வாகம் செயல்பட்டிருக்கிறது.

  இன்று நாடு முழுவதிலும் சிபிஎஸ்இ பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

 அந்த வகையில் ஸ்பார்க் பள்ளியிலும் இன்று தேர்வு நடக்கிறது.

  இந்த சிபிஎஸ்இ தேர்வில் கோர் மற்றும் எலக்டிவ் என்கிற இரண்டுவிதமான பிரிவுகள் உண்டு.

 அந்த வகையில் மேற்படி பள்ளிக்கூடத்தில் கோர் பிரிவு படிதான் பாடம் நடத்தியிருக்கிறார்கள். அதற்கான வினாத்தாளைத்தான் நிர்வாகம் அரசிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு தேர்வின் போது கொடுத்திருக்க வேண்டும்.

 அப்படியிருக்கையில், இன்று தேர்வு நடக்கும் நிலையில் வினாத்தாளை எதோ ஒரு நோக்கத்துக்காக பள்ளி நிர்வாகம் பிரித்து பார்த்ததாம். அது தொடர்ப்பாக பெற்றோர் சிலருக்கும் அவை பகிரப்பட்டதாம்.

  அதைப்பார்த்த பெற்றோர் ஆடிவிட்டனர். ஏனெனில் அது கோர் பிரிவு வினாத்தாள் அல்ல, மாறாக எலக்டிவ் பிரிவு வினாத்தாள் ஆகும்.

  அப்படின்னா படித்தது ஒரு பிரிவாக இருக்கும் போது, படிக்காத பிரிவுக்கு வினாத்தாள் கொடுப்பதா என்று விவரம் பெற்றோர் மத்தியில் பரவியது.

  ஆடிப்போன சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் நள்ளிரவு பள்ளிக்கூடத்தில் கூடி நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பினர்.

   அங்கு தோன்றிய சொளந்தர் என்பவர் இரண்டு கையெடுத்து கும்பிட்டு நீங்க தேர்வை எழுதுங்க நான் பார்த்துக் கொள்கிறேன், உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டேன் என்று கெஞ்சி கூத்தாடினார்.

 அதற்குள் அங்கு போலிஸ் வரவழைக்கப்பட்டது.

 அப்போது அங்கு பெற்றோர் மறியல் நடத்தி,  எங்க பசங்க தேர்வு எழுதமாட்டார்கள் என்று குரலெழுப்பினர்.

 தேர்வு எழுதலைன்னா ஆப்சென்ட் போட்டுவிடுவோம், இப்ப பரிட்சை எழுதுங்க மாற்று தேர்வு வேறு தேதியில் எழுத சிபிஎஸ்சி தேர்வு மையத்திடம் கேட்டு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் சொன்னதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

  இந்நிலையில் மேற்படி மாணவர்களுக்கு நடத்தப்படாத பாடத்துக்கு இன்று தேர்வு எழுதுகிறார்கள் பாவம்,

இந்நிலையில் பள்ளியின் நிர்வாகி திரு சௌந்தரராஜன் அவர்களிடம் பெற்றோர்கள் எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர் அதன்படி அவர் எழுதிக் கொடுத்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

மதிப்பிற்குறியா ஐயா வேலூர் மாவட்டம் அரியூரை அடுத்த திருமலைக்கோடியில் இயங்கி வரும் ஸ்பார்க் சீனியர் செகன்டரி ஸ்கூல் (சி.பி.எஸ்.இ) இப்பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு 24.02.2023 அன்று பொதுத்தேர்வெழுதும் 37 மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடம் (Subject Code:301) English Core-க்கு பதிலாக மூலம் (Subject Code: 001) English Elective ஆங்கில பாடத் திட்டத்தை தவறுதலாக பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்து விட்டது. தற்போது தவறுதலாக பள்ளி மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு வந்துவிட்டது. மேலும் இது இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ மண்டல அலுவலகம் மற்றும் சி.பி.எஸ்.இ தலைமை அலுவலகத்தில் (டெல்லி) தகவல் தெரிவித்து தீர்வுக்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் காரணமாக மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் மதிப்பெண் குறைவாக பெற்றாலும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு இப்பள்ளி நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்கிறது. இதற்கு பதில் அவர்களுக்கு அடுத்து வரும் COMPARTMENT Exam-ல் Subject Code:301 English Core பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வைக்கவும் உறுதி அளிக்கிறேன்.

  குறிப்பு:-பொதுவாக ஒரு சில பள்ளிகள் தேர்வுக்கு முன்தினம் இரவு வினாத்தாளை லீக் பண்ணுவார்களாம். அந்த வகையில் தான் கோர் மற்றும் எலக்டிவ் மாற்றம் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

   இது குறித்து கல்வியாளர் ஒருவர் தெரிவிக்கையில் இந்த பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கூடம் நடத்தும் பலர் தங்களை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு கல்வியை விற்பனை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று நடந்திருப்பது மாபெரும் பிழையாகும்.

  மாணாக்களில் மன உறுதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். மாணாக்களுக்கு மன உலைச்சல் ஏற்படுத்துகிற நடவடிக்கைகாக இது பார்க்கப்படுகிறது.

 இது சம்மந்தமாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும், நானும் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

  இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பேச முயன்றோம் இயலவில்லை. பின்னர் இது குறித்து அவர்கள் தரப்பு விளக்கம் அளிக்க முன்வந்தால் அதை பரிசீலித்து பிரசுரிக்கப்படும்.