காளையின் கயிற்றில் சிக்கிய வாலிபர்! ஆபத்தான நிலையில் சிகிச்சை!
கு.அசோக்,
எருதுவிடும் விழாவில் வாலிபர் கழுத்தில் கையிறு சிக்கிக் கொண்டதால் அவர் வெகு தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்.
வேலூ£ ¢மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள பனமடங்கி கிராமத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு காளைவிடும் விழாவானது நடைபெற்றது இதில் வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடியது.
காளைகள் வேகத்தை கண்ட இளைஞர்களும் பொதுமக்களும் ஆரவாரம் செய்தனா.
இதே போன்று ஊசூர் அருகேயுள்ள சிவநாதபுரம்,அடுக்கம்பாறை அருகேயுள்ள மூஞ்சூர்பட்டு,குடியாத்தம் குட்லவாரிப்பள்ளி ஆகிய கிராமங்களிலும் காளைவிடும் விழாக்கள் நடந்தது.
அப்போது வேகமெடுத்த ஒரு காளையை பின் தொடர்ந்து ஓடிய ஒரு வாலிபரின் கழுத்தில் கயிறு சுற்றிக்கொண்டது.
அவர் நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்டார். பின்னர் அங்கு குழுமியிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.