ஆளுங்கட்சியினரின் அடாவடியால் பா.ம.க. நிர்வாகி தற்கொலை! பதற்றம்!

ஜி.கே.சேகரன்,
திமுகவைச் சேர்ந்த காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன் தலைமையில் அடியாட்களை கொண்டு பாமக முன்னாள் ஒன்றி-ய செயலாளர் நாகேஷின் சொத்தை அபகரிக்க முயற்சி- அரசு அதிகாரிகள் காவல்துறையினர் துணை போவதால் பாமக நிர்வாகி நாகேஷ் தூக்கிட்டு தற்கொலை சம்பந்தபட்ட குண்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பெரிய போடி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ். இவர் பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளராவார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அரிசிவலிங்கம் மற்றும் பெருமாள் குப்பம் திமுக தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் நாகேஷ் இல்லாத நேரத்தில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து நாகேஷுக்கு சொந்தமான இடத்தில் இருந்த வாழை மரம் பூச்செடிகள் முருங்கை மரங்கள் போன்றவற்றை அழித்தனர்.
இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி மேல்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் காட்பாடி திமுக ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் அடியாட்கள் வந்து நாகேஷை மிரட்டியுள்ளனர் மேலும் காவல்துறை வருவாய்த்துறையும் நாகேஷுக்கு எதிர்ப்பாக தொடர்ந்து மிரட்டி புகார் அளித்தும் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் குண்டர்களை வைத்து வேல்முருகன் மிரட்டியதன் அடிப்படையில் நாகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆகவே குண்டர்களை வைத்து மிரட்டியவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க கோரி பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம் மாவட்டத்தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சம்பந்தபட்டவர்கள் மீது நியாயம் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
நாகேஷின் சாவுக்கு காரணமான காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.