தேர் தீப்பிடித்து 11 பேர் பலி- பகீர் காரணம்!!

ஜி.பாலகுரு,
தஞ்சாவூர் களிமேட்டில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருநாவுக்கரசு கடவுளுக்காக 3 நாள் விழா நடைபெறும். அந்த வகையில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். (மோகன் (வயது 22), பிரதாப் (வயது 36), ராகவன் (வயது 24), அன்பழகன் (வயது 60), நாகராஜன் (வயது 60), செல்வம் (வயது 56), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ், சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) .
) மேலும் 305 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு, இந்திய ஜனாதிபதி உடபட தமிழக முதல்வர் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தேரில் எப்படி மின்சாரம் பாய்ந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தை நேரில் பார்த்த களிமேடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், "திருநாவுக்கரசு கடவுளுக்காக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 நாள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று கோவிலில் இருந்து இரவு 10 மணி அளவில் புறப்பட்ட தேர் ஊரை வலம் வந்து மீண்டும் கோவிலுக்கே திரும்ப சென்று கொண்டிருந்தது.
இறுதியாக ஊரை சுற்றி விட்டு ஒரு வீட்டில் தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை நடந்தது.
அதன்பிறகு தேர் வளைவில் திரும்பும் போது பின்னால் வந்து கொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது. இதையடுத்து ஜெனரேட்டரை சரி செய்து கொண்டிருந்த போது தேரின் உச்சியை சாலையின் மேல் சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்தக் கம்பி உரசியது.
இதனால் இரும்பு அமைப்பாலான தேர் மற்றும் ஜெனரேட்டரை கொண்டு வந்த வாகனம் மீது உயர்மின் அழுத்த த மின்சாரம் பாய்ந்தது.
இதனால் ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர், தேங்காய் உடைப்பதற்காக தேரில் அமர்ந்திருந்த நபர், தேரை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.
ஆனால் தேரை சாலையில் திரும்பும்போது தேரின் உயரத்தை குறைக்க உதவும் மடக்கி தூக்கும் அமைப்பு பயன்படுத்த தவறிவிட்டனர்.
இப்படி தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தாததால் தேரை திருப்பும்போது சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது.
இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் இரும்பு அமைப்பால் ஆன தேர் மற்றும் ஜெனரேட்டை கொண்டு வந்த வாகனம் மீது பாய்ந்தது. இதனால், தேரை பிடித்திருந்தவர்கள், ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர், பூஜைக்கு தேங்காய் உடைப்பதற்காக தேரில் அமர்ந்திருந்த நபர் உள்ளிட்டோர் மீது மின்சாரம் பாய்ந்தது.
உயர் மின் அழுத்தம் என்பதால் மின்சாரம் பாய்ந்ததில் அனைவராலும் எதுவும் செய்யமுடியவில்லை. உயர் மின் அழுத்த கம்பி சாலைக்கு மேல் ஊருக்கு உள்ளே வைத்திருந்ததால் ஆபத்தாக முடிந்தது.
மேலும், சாலையை விரிவாக்கம் செய்யும்போது மின்சார கம்பியை கவனிக்காமல் இருந்ததும் இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது.
அதாவது, இதற்கு முன்னாள் சாலை சிறியதாகவே இருக்கும். அப்போது, ரோட்டிற்கு உள்ளேயே தேரை திருப்பி விடுவார்கள். தற்போது சாலை அகலப்படுத்தி இருந்ததாலும் அதன் உயரம் அதிகரித்து இருந்ததாலும் தேரை சற்று முன்னே சென்று வளைத்தி திருப்பியதாலும் சாலைக்கு மேலே சென்றுகொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பி மீது தேரின் உச்சி உரசி தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது என்று சொல்கிறார்கள்.