கூகுல்பே மூலம் லஞ்சம் பெறும் காவல் துறையினர்!

கூகுல்பே மூலம் லஞ்சம் பெறும் காவல் துறையினர்!

ம.பா.கெஜராஜ்,

 டெக்னாலேஜி முன்னேற்றம் அடைய, அடைய அதனுடனே லஞ்சம் பெறும் அலுவலர்களும் இணைந்து பயணிக்க துவங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் சிலரைப் பற்றின விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

  அதில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் பெயரும், அதே போல் காவல் வாகன ஓட்டுநர் ஒருவரின் பெயரும் சிக்கியிருக்கின்றது.

முதலாவதாக பெண் இன்ஸ்பெக்டரைப் குறித்து வந்த தகவலைப்பற்றி பார்ப்போம்.

 நாட்றாம்பள்ளி அருகே உள்ள கோரி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ஒருவரை தேடி பெண் இன்ஸ்பெக்டர் டீம் சென்றுள்ளது. இப்படி ரைடு வருகிறார்கள் என்பதை அதே பிரிவில் ரைட்டராக உள்ள சபீர் என்பவர் கள்ளச்சாராய வியாபாரிக்கு முன் கூட்டியே இன்பார்ம் செய்துவிட்டார். அதனால் இன்ஸ்பெக்டரிடம் சிக்காமல் சாராய வியாபாரி எஸ்கேப் ஆகிவிட்டார்.

 இந்நிலையில் வியாபாரியின் மனைவியை பிடித்துக் கொண்டு வந்த இன்ஸ்.....அவரை ரிமாண்ட் செய்து தன் கடமையை செய்திருக்கிறார்.

 அப்படிப்பட்ட கடமையாளர் ரிமாண்ட்டுக்கு முன்னதாக சாராய வியாபாரியின் மச்சானிடம் பேரம் பேசியதாக சொல்கிறார்கள். சுமார் நான்கு லட்சம் வரை பேசியுளளனர்.  இடையே ஒரு தொகை கூகுல்பே மூலம் லஞ்சமாக வாங்கியுள்ளார் அம்மணி.

 அது மட்டுமில்லாமல் எழுத்தர் சபீர் உட்பட அந்த பிரிவில் உள்ள பலர் அந்த சாராய வியாபாரியிடம் கூகுள் பே மூலம் பணம் வாங்கியிருக்கிறார்கள்.

   இப்படியெல்லாம் பணம் வாங்கிக் கொண்டும், எங்க அக்காவை ரிமாண்ட் செய்துவிட்டீர்களே என்று பொங்கும் சாராய வியாபாரியின் மச்சான், எங்க அக்கா வெளியில் வந்தவுடன் எல்லாரையும் போட்டுக் கொடுப்போம். அதாவது, யாருக்கெல்லாம் கூகுல் பே மூலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதை போலிஸ் உயர் அதிகாரிகளிடம் பட்டியல் கொடுத்து எங்க ஊரில் சாராயம் காய்ச்சுவதை நிறுத்துவோம் என்று சபதேமேற்றுள்ளாராம்.

  ஆக, அந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் ஓடுவது நிரூபணமாகியுள்ள நிலையில், அதை தடுக்க வேண்டியவர்களோ லஞ்சம் வாங்கிக்கொண்டு கேட்டை திறந்து வைத்துள்ளதும் உறுதியாகியிருக்கிறது.

  அடுத்ததாக ஜங்ஷன் ஏரியாவில் உள்ள காவல் நிலையத்தில் ஓட்டுநராக உள்ள ஒருவர், ஒயிட் கலர் எம்.சேண்ட் எடுத்து வரும் தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

 மேற்படி கட்டுமான பொருட்கள் சப்ளை செய்யும் தொழிலதிபர், அவரது வாகனங்களில், செங்கல், சிமென்ட் போன்றவை எடுத்துச்சென்றாலும் அந்த காவலர் மிரட்டியே பணம் வசூல் செய்வதாகவும், அப்படி இதுவரை லட்சக்கணக்கான பணத்தை கூகுள் பே மூலம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 இந்த சூழலில், ஒருகட்டத்துக்கு மேல் கொதித்த அந்த தொழிலதிபர், இதுவரை அந்த போலிஸ்காரருக்கு கூகுள் பே வாயிலாக அனுப்பிவைத்த லஞ்ச பணத்துக்கான ரசீதை வெளியிட்டிருக்கிறார்.

 கூடவே இது போன்ற லஞ்ச போலிஸ்காரர்கள் மீது உயர் போலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.