வேலூர் ஆவின் நிறுவனத்தில் குளறுபடி!பால்சப்ளை செய்யவில்லை என குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,
சர்ச்சைக்கு பெயர் போன வேலூர் ஆவின் நிறுவனத்தில் இன்றூ ஏகப்பட்ட களேபரம் ஏற்பட்டது.
வேலூர்மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின் ) தலைமை அலுவலகம் உள்ளது.
நாள் ஒன்றிற்கு 70 ஆயிரம் லிட்டருக்கு மேலாக இந்த நிறுவனத்திலிருந்து பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக ஆவின் முகவர்களுக்கு பணம் கட்டிய பின்னரும் ஆவின் பால் சரியாக சப்ளை செய்யப்படுவதில்லை.
பால் நிரப்பும் ஒப்பந்த பணியாளர்கள் சரியாக பணிக்கு வரவில்லை எனவும் சென்னை நகருக்கு பால் தேவை அதிகம் உள்ளதால் சென்னைக்கு பால் அதிக அளவு இங்கிருந்து அனுப்பப்பட்டு வருவதுமே இதற்கு காரணமாம்.
ஆகவே முகவர்களுக்கு உரிய பால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் பால் பாக்கெட்டுகளை மக்கள் நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று பால் முகவர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஆவின் நிறுவனத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தங்களுக்கு பால் தடையில்லாமல் விநியோகிக்க வேண்டும் ஆவின் நிறுவனத்தின் இந்த செயல் தனியார் பாலை ஊக்குவிக்கும் நிலையில் உள்ளதாக கூச்சல் எழுப்பினர். இதனால் பதட்ட நிலை காணப்பட்டது.
இந்நிலையில் திமுக ஐடி விங் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றது.
*வேலூர் மாவட்ட குழந்தைகளின் உயிரோடு விளையாடிய அதிமுக முன்னாள் ஆவின் சேர்மேன் தா.வேலழகனை கண்டிக்கிறோம்* !
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களின் கவனத்திற்கு..
இன்று காலை வேலுர் மாவட்டத்தில் குறிப்பாக வேலூர்,குடியாத்தம், ஆற்காடு ராணிப்பேட்டை,திருப்பத்தூர் போன்ற பகுதிகளின் ஆவின் பால் வினியோகம் தடைப்பட்டதாக பொது மக்களிடமிருந்து பூகார் வந்தது இதற்கான முழு காரணம் கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுகவும் அதற்கு சேர்மேனாக இருந்த அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும் அதன் சேர்மேனாக இருந்த திரு *தா.வேலழகன்* அவர்கள் தான் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
காரணம் கடந்த 2013 ஜூன் மாதம் வேலூர் மாவட்ட ஆவின் சேர்மேனாக பொறுப்பேற்ற திரு *தா.வேலழகன்* அவர்கள் கடந்த ஆகஸ்டு 29 -08-2022 வரை அந்த பொறுப்பில் இருந்து வந்தார், கடந்த மாதம் ஆகஸ்ட் 29 அன்று இந்த ஆவின் போர்ட் கலைக்கப்பட்டு அதன் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது, அப்போது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட திரு வேலழகன் அவர்கள் தனது வேலையை காட்டி விட்டார் அதாவது வேலூர் பால் பண்ணையில் 125 க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வந்தார்கள்,இந்த ஒப்பந்த ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் திரு வேலழகன் அவர்களால் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்வர்கள் இந்த அதிமுக ஆதரவு ஊழியர்கள் திரு.வேலழகன் ஆகஸ்ட் 29 அன்று அந்த பதவில் இருந்து விலகிய பின் அதாவது நேற்று புதன் ஆகஸ்ட் 31 அன்று இரவு பணிக்கு வரவேண்டியவர்களில் சுமார் 35 ஊழியர்கள் வர வில்லை, அவர்கள் தான் இரவில் பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்பவர்கள் அவர்கள் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி அன்று இரவு வராத காரணத்தினால் இரவில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 35 ஆயிரம் பால் பாக்கெட்டுக்கள் மட்டுமே பேக் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது, காரணம் இவை அனைத்தும் திரு வேலழகனின் துண்டுதலால் திட்டமிட்டு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலையில் இருந்து நின்று விட்டனர்.
இதனால் இன்று காலை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு பால் விநியோகம் தடைப்பட்டு பொது மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளானதை அறிந்து உடனடியாக தமிழ்நாடு பால் வளத் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு. *ஆவடி சா.மு.நாசர்* அவர்களின் கவனத்திற்கு கொண்டு
சென்றார் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு *A.P.நந்தகுமார். MLA* அவர்கள் பிறகு பால்வளத் துறை அமைச்சரின் துரித நடவடிக்கையால் நிலைமை 3 மணி நேரத்தில் சரி செய்து பால் வினியோகத்தை சீரானது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஆவின் நிறுவனத்தில் கொள்ளை அடித்து சுக வாழ்வு வாழ்ந்த திரு வேலழகனுக்கு திடீர் என்று பதவி பறிபோனதால் இப்படி குழதைகளின் உயிரோடு விளையாடி இருக்கிறார்..
மேலும் குழந்தைகளின் பசியை போக்கவும் அவர்களுக்கு உயிர் ஆதாரமாகவும் இருக்கும் இந்த பால் விசயத்தில் அதிமுகவை சேர்ந்த புறநகர் மாவட்ட செயலாளரும் ஆவின் சேர்மேனுமான திரு வேலழகனின் வீட்டிற்க்கு தினமும் 10 லிட்டர் பால் வீதம் கடந்த 9 வருடங்களாக ஓசியில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரின் இந்த கேவலமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் :
*திமுக தகவல் தொழில்நுட்ப அணி*,
வேலூர் மாவட்டம்.