திமுக எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏவுக்கும் லடாய்!

திமுக எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏவுக்கும் லடாய்!

 கு.அசோக்,

 அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் திமுக எம்எல்ஏவுக்கும் அதிமுக எம்எல்ஏவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

 திருப்பத்தூர்மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகொண்டா  தாசிரியப்பனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் 100 மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கினார்

 அப்போது அதிமுக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், விழா நடந்த பள்ளிக்கு வந்து இது என்னுடைய தொகுதி எனக்கு தகவல் கொடுக்காமல் எவ்வாறு மாணவர்களுக்கு மிதிவண்டி கொடுக்கலாம் என சீன் போட்டார்.

 அதன் பின்னர் மாவட்ட குழு தலைவர் சூரியகுமார் சமாதான பேச்ச ஈடுபட்டார், இருப்பினும் சமாதானம் ஆகாத செந்தில்குமார் அங்கிருந்து கிளம்பினார்.

    அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆதரவாளர்களுக்கும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது.

 இதன் காரணமாக அரசு பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.