இரவு ஏழுமணிக்கு வாக்களிக்க வந்த குடிமகன்:- ரகளை!

கு.அசோக்
கேவிக்குப்பத்தில் வாக்குபதிவு முடியும் நிலையில் குடிமகன் உள்ளே புகுந்து ரகளை 7 மணிவரையில் வாக்குபதிவை நடத்த கோரியதால் காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தினார்கள்.
வேலூர்மாவட்டம்,கே.வி.குப்பம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவானது துவங்கி காலை முதல் அமைதியாக நடந்தது.
ஆனால் மாலை தேர்தல் முடியும் நேரத்தில் வாக்குசாவடியினுள் காவல்துறையையும் மீறி குடிமகன் ஒருவர் போதையில் உள்ளே நுழைந்தார்.
அவர் வாக்குசாவடி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தேர்தல ஆணையம் அறிவித்தபடி தேர்தலை 7 மணிவரையில் நடத்த வேண்டுமென கோரி சவுண்டுவிட்டார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் குடிமகனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள் அதன் பின்னர் வாக்குபெட்டிகள் சீல் வைத்து பத்திரமாக அனுப்பட்டது.
வாக்குசாவடியில் நுழைந்து குடிமகனின் ரகளையால் பரபரப்பு ஏற்பட்டது