தேர்வு கட்டுபாட்டு அலுவலரின் இரண்டாவது மனைவி வீட்டில் ரெய்டு!!

கு.அசோக்!
காட்பாடியில் திருவள்ளூவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுபாட்டு அலுவலரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
வேலூர்மாவட்டம், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வசிப்பவர் அசோகன். இவருக்கு இரண்டுமனைவிகள் உள்ளனர்.
இவர் காட்பாடி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் ஆவார்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/31vZwvuXdeQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
அசோகனின் இரண்டாவது மனைவி ரேனுகா தேவி காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
மேற்படி அசோகன் தேர்வு கட்டுபாட்டு அலுவலராக இருந்த காலத்தில் அதிக அளவு முறைகேடு செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாக 2017 ஆம் ஆண்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் விஜய் தலைமையில் அசோகனின் மனைவி ரேனுகாதேவி வீட்டில் சோதனை நடத்தினர்.
6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இந்த பல்கலையின் துணை வேந்தர் உள்ளிட்ட பலர் மீது தற்போதைய அமைச்சர் துரைமுருகன் ஊழல் குற்றச்சாட்டு கூறியது குறிப்பிடத்தக்கது.