நீட் தேர்வு சரியாக எழுதலையாம்? தற்கொலை செய்துக் கொண்ட மாணவி!!

ஜி.கே.சேகரன்,
மிக முக்கியம், தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம். இது போன்ற மன அழுத்தம் பலருக்கு ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட சூழலுக்கு தற்கொலை தீர்வு அளிக்காது. பார்க்கப் போனால் இப்படிப்பட்ட முடிவானது பெற்றோர், உற்றார் உறவினர் மற்றும் சமூகத்துக்கு ஏற்படுத்தப்படும் இன்னலே ஆகும்.
ஆக மன அழுத்தம் அதிகமாகும் போது கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசவும். இவை 24 மணிநேரமும் செயல்படக்கூடியவை ஆகும்.
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000
காட்பாடியில் நீட் தேர்வு சரியாக எழுதாததால் வீட்டிலேயே மாணவி தூக்கு போட்டு தற்கொலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம்.காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு ருக்மணி, கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சௌந்தர்யா, தோட்டப்பாளையம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் உள்ள நீட் மையத்தில் நீட் தேர்வு எழுதிய இவர் கணிதபாட தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தனக்குத் தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து லத்தேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீட் தேர்வால் தற்கொலை செய்து இறந்த மாணவி சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஸ்
தமிழகத்தில் மட்டும் நாளுக்கு நாள் மாணவ,மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து வருவது தொடர்கதையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.