திருமணத்திற்கு மறுத்த காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயச்சி!

திருமணத்திற்கு மறுத்த காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயச்சி!

கு.அசோக்,

  காதலியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதை அறிந்த காதலன் ஆத்திரத்தில் செய்த சம்பவம் நூலிழையில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நரியம்பட்டை சேர்ந்த பட்டாபி என்பவரது மகள் ஸ்ரீதேவி (27). இவர் பி.எஸ்.சி நர்சிங் முடித்து விட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

 அதே பகுதியை சேர்ந்த  சையத் பீர் மகன் சமியுல்லா (35). கார் டிரைவர். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

 இந்நிலையில், குடும்ப சூழல் காரணமாக சமியுல்லாவை சந்திப்பதை ஸ்ரீதேவி தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதற்கு ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சமியுல்லா ஒரு கேனில் பெட்ரோல் 5 லிட்டர் மற்றும் ஒரு கேனில் டீசல் 10 லிட்டர் ஆகியவற்றை வாங்கி கொண்டு  ஸ்ரீதேவி வீட்டிற்கு வந்துள்ளார்.

  அங்கு ஸ்ரீதேவியிடம் திருமணம் செய்து கொள்ள மீண்டும் கேட்க, அவர் தொடர்ந்து திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  சமியுல்லா தான் கொண்டு வந்த பெட் ரோலை ஸ்ரீதேவி மீது ஊற்றி தீ வைக்க முயன்றார்.

 மேலும், தன் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்  இதில் தீ வைக்க முயன்ற சமியுல்லாவை தடுத்த ஸ்ரீதேவி கூச்சலிட்டுள்ளார்.

  உடன் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ஸ்ரீதேவியை மீட்டு உடனடியாக  அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார்.

  மேலும், சமியுல்லாவை உம்ராபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 இதுகுறித்த புகாரின் பேரில் உம்ராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து சமியுல்லாவை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.