பொள்ளாசி பாலியல் குற்றவாளிகளை உறவினர்களிடம் பேச வைத்த ஏழு போலிசார் சஸ்பெண்டு!

ம.பா.கெஜராஜ்,
பொள்ளாசி பாலியல் குற்றவாளிகளை உறவினர்களிடம் பேச வைத்த ஏழு போலிசார் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை கோவை மகிளா நீதிமன்றத்திலிருந்து சேலம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களை உறவினர்களிடம் பாதுகாப்பு போலிசார் பேசவைத்தனராம்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 7 பேரை காவல்துறையினரை சேலம் காவல் ஆணையர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
குமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதிஷ் ஆகிய குற்றவாளிகள் சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
சேலம் ஆயுதப்படை எஸ்.எஸ்.ஐ.சுப்பிரமணியம் தலைமையில் காவலர்கள் பிரபு வேல்குமார் கார்த்தி ராஜேஷ்குமார் நடராஜன் ராஜ்குமார் ஆகியோ பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தி விட்டு சேலம் மத்திய சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வரும்பொழுது, போவை ஏர்போர்டு அருகே போலிஸ் வேன் நிறுத்தப்பட்டது.
அந்த இடத்தில் மேற்படி குற்றவாளிகளின் உறவினர்களை காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சவாகாசமாக பேசி முடித்தபின்னர் எதையோ பரிமாரிக்கொண்டனர்.
இதை யாரோ வீடியோ படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அது சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதாக்கு தெரியவந்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட அவர் மேற்படி காவல் துறையைச் சேர்ந்த ஏழு பேரையும் அதிரடியாக சஸ்பெண்டு செய்தார்.