ராஜீவ் கொலையாளிகள் விடுதலையா? காங் கட்சி கறுப்பு துணிகட்டி ஆர்பாட்டாம்!

ராஜீவ் கொலையாளிகள் விடுதலையா? காங் கட்சி கறுப்பு துணிகட்டி ஆர்பாட்டாம்!

 கு.அசோக்.

  வாலாஜாவில் நளினி,சாந்தன்,முருகன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்பாட்டம் நடத்தினர். 

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில்,  காந்தி சிலை அருகே முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

   முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து வாலாஜாபேட்டை காந்தி சிலை அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் வாலாஜா அசேன் அவர்களின் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று திரண்டு வாயில் கருப்பு தூணி கட்டியவாறு நூதன முறையில்  ஆர்ப்பாட்டத்தை  நடத்தினர்.

  மேலும் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விடுதலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.