ஃபயர் தோழிகள் பிளேடால் அறுத்து சாவ முயற்சி!

த.தியேடர்,
லெஸ்பியன் எனப்படும் ஃபயர் தோழிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
'லெஸ்பியன்' ஜோடிகளிடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவியை பிளேடால் அறுத்துவிட்டு அவரது தோழி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. சிக்கமகளூரு, தாவணகெரே டவுனில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் சிக்கமகளூரு மாவட்டம் கடூரை சேர்ந்த பத்மாவதி என்ற மாணவி பி.எட். படித்து வருகிறார். அவருடன் தாவணகெரேயை சேர்ந்த குயிலி (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியும் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்து இறுதியில் லெஸ்பியன் ஜோடியாக மாறினர். இந்நிலையில் பத்மாவதி, அதே கல்லூரியில் படித்து வந்த மற்றொரு மாணவியுடன் பழகி வந்துள்ளார். இது குயிலிக்கு பிடிக்கவில்லை. இதனால் தன் மீதான காதல், லெஸ்பியன் உறவு முறிந்துவிடுமோ என்று எண்ணிய பத்மாவதி, குயிலியை வேறொரு மாணவியிடம் பேசி பழகுவதை கண்டித்து வந்துள்ளார்.
ஆனால் அதற்கு பத்மாவதி செவிசாய்க்காமல் தொடர்ந்து வேறு பெண்ணுடன் நட்பாக பேசி வந்துள்ளார். எனவே ஆத்திரமடைந்த பத்மாவதி, குயிலியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு பத்மாவதி, கல்லூரி விடுதியில் குயிலி தங்கியிருந்த அறைக்கு சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் பத்மாவதி கழுத்து, முகத்தில் அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த குயிலி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குயிலி, தானும் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.