திருமங்கலம் மற்றும் காட்பாடியில் 375 கிலோ கஞ்சா பிடிபட்டது!

கு.அசோக்,
திருமங்கலம் மற்றும் காட்பாடியில் 375 கிலோ கஞ்சா பிடிபட்டது வாகனங்கள் கைபற்றப்பட்ட நிலையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. மேற்படி ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து., டாட்டா சுமோ வாகனத்தில் 4 பேர் கொண்ட கும்பல் 340 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர்., தனிப்படை போலீசார் காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும்,இந்த கடத்தல் தொடர்பாக கூடல்நகர் பகுதியைச் தெய்வம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார், ரமேஷ் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் போலீசார் ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல், வேலூர் மாவட்டம்.காட்பாடி அடுத்த கிரிஸ்டியன் பேட்டியில் அடுத்தடுத்து 34 கிலோ 800 கிராம் கஞ்சா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 3 லட்சத்து 48 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வருகின்றனர், இதனை கட்டுக்குள் கொண்டுவர ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல் இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் துறையினர் தமிழக ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் சோதனை செய்த போது 7 பார்சல்களில் கஞ்சா கடத்துவது தெரியவந்து.
தலா 2 கிலோ எடை கொண்டா 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தமிழக அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்ட பொழுது ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்திச் செல்லப்பட்ட 34 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தேனி மாவட்டத்தை சேர்ந்த தெற்கு ஜெகநாதபுரம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்தடுத்த பேருந்தில் கஞ்சா கடத்தல் சம்பவம் போலிசாரை உஷாரடைய செய்துள்ளது.