கேங் ரேப்பர்களை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி.நேரில் பாராட்டா?போலிசாரை இடமாற்றம் செய்தார்களா இல்லையா?

கேங் ரேப்பர்களை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி.நேரில் பாராட்டா?போலிசாரை இடமாற்றம் செய்தார்களா இல்லையா?

  ஜி.கே.சேகரன்,

 தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபு,இ.கா.ப.அவர்கள் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் கருணாகரனை நேரில் வரவழைத்து அவருக்கு பாராட்டு பத்திரம் அளித்து கவுரவப் படுத்தியுள்ளார் எனவும்,

 வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் பெண் டாக்டரை கேங் ரேப் செய்த குற்றவாளிகளை துரிதமாக கைது செய்தமைக்காக இந்த பாராட்டு அவருக்கு கிடைத்திருக்கிறது என்று தவறான செய்தி ஒன்று பரவிக்கொண்டிருக்கிறது கூடவே புகைப்படம் வேறு.

ஆனால் அவருக்கு கிடைத்த பாராட்டு பத்திரம் வேறு விஷயத்திற்காக என்பதே நிஜம்.

அதாவது சட்டவிரோதமாக ஐந்து தொலைத் தொடர்பு வைத்திருந்தவர் மீது நடவடிக்கை எடுத்தமை காக அளிக்கப்பட்ட பாராட்டு ஆகும்.

 கீழே உள்ளதுதான் அந்த பாராட்டு சான்று.

 இந்நிலையில் மு கோ பாலியல் வழக்கில் முறையாக செயல்படாத தனிப்பிரிவு காவலர் ஜெயகரன் மற்றும் வடக்கு காவல் நிலைய காவலர் நித்தியானந்தம், சுரேஷ் பாபு ஆகியோர் பணி செயல்பாடு குறைவு காரணமாக மூவரும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டதாக சில செய்திகள் பரவியது.

 இந்நிலையில் அதெல்லாம் ஒன்றுமில்லை அந்த சம்பவத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை, மீண்டும் அவர்கள் அதே பணிக்கு திரும்ப வந்துவிட்டனர் என்கிறது மாவட்ட காவல் அலுவலக வட்டாரம்.

 இப்படியிருக்க வேலூரில் சில ஆட்டோக்காரர்களை வரவழைத்த காவல் துறையினர் அவர்களை சித்ரா மகாலில் அமரவைத்து வகுப்பெடுத்தனர்.

 குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் பி.வி.ஆர். தியேட்டர் அருகிலிருந்து ஷேர் ஆட்டோவில் வந்த பெண் மருத்துவரை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி காவல் துறை மூலம் அவர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது. 

 வேலூர் டவுன் ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில்,இரவு நேரக்களில் இயக்கப்படும் ஆட்டோகளுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன.

 ஆட்டோக்களின் பின்புறம், ஓட்டுனரின் ஐடி நம்பர், உரிமையாளர் பெயர் விலாசம், ஆட்டோ ஓட்டுநரின் போன் நம்பர் அதே போன்று, பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி ஓட்டுநரின் உரிமம் ஆர்.டி.ஓ லைசன்ஸ் ஆகியவை கட்டாயம் டிஸ்பிளே செய்ய வேண்டும் என கட்டுபாடுகள் விதிக்கப்படுள்ளது.

 கட்டுபாடுகளை  மீறும் ஆட்டோ ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, ஆட்டோ பறிமுதல் செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இந்த கூட்டத்தில், காட்பாடி டி.எஸ்.பி.பழனி, வட்டார போக்கு வரத்து அலுவலர் செந்தில் வேலன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

 இது குறித்து ஆர்.டி.ஓ.வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், வேலூர்,காட்பாடி,சத்துவாச்சாரி,சாயிநாதபுரம் மற்றும் தொரப்பாடி பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் தான் அதிகம் ஓடுகிறது..

 அவற்றின் உரிமையாளர்களில் பலர் காவல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் விதிமுறைகளை மீறுகிற பொழுது  துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் பாஷியாலிடி உள்ளது.

 அதையெல்லாம் களைய வேண்டும், மேலும் வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கென சொல்லும்படியாக சங்கம் இல்லை.

 அப்படியிருந்தால் ஓரளவுக்கு இது போன்ற நிலையை சீராக்கலாம் என்றார் அவர்.

 அதே போல் "நறுவீ மருத்துவமனை" வரை சர்வீஸ் லைனில் இரவில் விளக்குகள் பிரைட்டாக உள்ளது. அதை கடந்து 250 மீட்டருக்கு அப்பால் சென்றால் சர்விஸ் லைனில் விளக்குகளே இல்லை. இதெல்லாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியனும் தானே என்று பலரும் சொல்கிறார்கள்.