பள்ளிகொண்டா கோவிலுக்கு அன்னதான திட்டம்!ஏ.பி.நந்தகுமார் சட்டபேரவையில் பேச்சு!
த.மதன்,
அணைக்கட்டு சட்ட பேரவை உறுப்பினராக இருக்கும் ஏ.பி.நந்தகுமார் இன்று கேள்வி நேரத்தின் போது பேசுகையில், நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அணைக்கட்டு தொகுதியில் பள்ளிகொண்டா ரங்கநாதர் ஆலயம், வெட்டுவனம் எல்லையம்மன் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தேஷ்வரர் ஆலயம் மற்றும் தங்கக்கோவில் என புகழ் பெற்ற நான்கு கோவில்கள் உள்ளன.
இதில் பள்ளிகொண்டா கோவிலுக்கு அன்னதான திட்டம் வருவதற்காக சாத்தியக் கூறுகள் எந்த அளவில் உள்ளது என்று கோரினார்.
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்கையில், உறுப்பினர் குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு பசிலி ஆண்டுக்கு 19 லட்சம் தான் வருகிறது. ஆகவே பக்கத்து கோவில்களிலிருந்து இந்த கோவிலுக்கு மாற்றி இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பதை ஆராய்வோம்.
கடந்த ஆட்சியில் அன்னதான திட்டம் 34 கோவில்களில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்த ஆட்சியில் 754 கோவில்களில் நடத்தப்படுகிறது.
மேலும் ஒன்றிய அரசு தரச்சான்று 341 கோவில்களுக்கு அளித்துள்ளது.
மேற்படி கோவிலுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குட முழக்கு செய்யப்பட்டது. ஆகவே இந்த ஆண்டு அக்கோவிலுக்கு குட முழக்கு செய்யப்படும் என்று சொன்னார்.