தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்ட்டார்!

ஜி.சாந்தகுமார்,

 தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட்டார்.

 இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்.'' என்று கூறப்பட்டுள்ளது.

 நீக்கத்துக்கான காரணம்,

தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில், ''காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

  அவரது இந்த கருத்து, தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.