"இளைய தளபதி".....! கொடநாடு கேசுல எடப்பாடியை விசாரியுங்க! ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் கோஷம்!

"இளைய தளபதி".....! கொடநாடு கேசுல எடப்பாடியை விசாரியுங்க! ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் கோஷம்!

 G.Santhakumar,

'இளைய தளபதி' என்று குரல் எழுப்பியபடி வந்த ஓ.பன்னிர் செல்வத்தின் ஆதரவாளர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம்  தி.மு.க.தேர்தல் வாக்குறுதியில் கொட நாடு வழக்கை விசாரிப்போம் என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றும் கோஷமிட்டனர்.

இது பற்றின விவரம் வருமாறு,

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக கடந்த மாதம் 24-ந்தேதி இறந்தார். அப்போது பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது  இரங்கலை தெரிவித்தார்.

 அப்படியிருக்க ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் அடையார் கிரீன் வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு சென்றார். அவருடன் இந்து சமய அரநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் ஆகியோர் சென்றனர்.

 அப்போது அவர்களை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுவாசலில் நின்று  வரவேற்றார். வீட்டுக்குள் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தைரியமாக இருங்கள் ஆறுதல் கூறினார்.

 இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் மற்றும் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.

 பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறப்பட்டு சென்ற போது ஓ.பன்னிர் செல்வத்தின் ஆதரவாளர்கள்  உதயந்திக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

 குறிப்பாக அமைச்சர் உதயநிதி காரில் ஏறிய சமயத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 'இளைய தளபதி' என்று குரல் எழுப்பியபடி வந்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அவர்கள், தி.மு.க.தேர்தல் வாக்குறுதியில் கொட நாடு வழக்கை விசாரிப்போம் என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றும் கோரிக்கை விடுத்தனர்.

  அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, பெரி யகருப்பன் உள்ளிட்டோரும் சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் சொன்னார்கள்