மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்!

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்!

 ம.பா.கெஜராஜ்,

 தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், புதிய சாலை மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து அவர் மதுரை நத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது:-

மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடந்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், கலைஞர் நூலக கட்டிடப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

அங்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மேற்பார்வையில் கட்டிட வேலை நடந்து வருகிறது.இது ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும். தற்போது 90 சதவீதம் கட்டிட பணி முடிந்து உள்ளது.கட்டிடங்களின் உள் அலங்கார வேலைகள் நடக்க உள்ளது. கலைஞர் நூலகம் என்பதால் பணிகள் விரைந்து நடப்பதாக கூறுவது உண்மை அல்ல.

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கோரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட உள்ள மேம்பாலத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிதான் நடக்க வேண்டி உள்ளது என்றார்.

பேட்டியின் போது பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.