விறு... விறு... வேட்பு மனுதாக்கல்!

கு.அசோக்,
வேலூர் கணியம்பாடி அனைக்கட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது மக்கள் கூட்டம் அலுவலகங்களில் அலைமோதியது
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்றும் விறுவிறுப்பாக நடந்தது. பெண்கள் அதிக அளவில் ஆர்வமுடன் தங்கலின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களின் கிராம மக்களின் ஆதரவோடு வேட்பு மனுதாக்கல் செய்ய வந்ததால் அலுவலகத்தின் வெளியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் இன்று ஒரே நாளில் ஊராட்சி மன்றதலைவர் பதவிகளுக்கு 38 பேரும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களின் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதே போன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் அனைக்கட்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திமுக,அதிமுக,பாமக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்டோரும் தங்களின் வேட்புமனுக்களை ஆர்வமுடன் தாக்கல் செய்தனர்.