அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு தி.மு.க வில் மா.செ. பதவி!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு தி.மு.க வில் மா.செ. பதவி!

 க.முனிசாமி,

 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க திமுக தலைமை முடிவெடுத்துல்ளதாம்.

 முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 2021 ஆம் ஆண்டு சட்டபேரவைக்கான தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

  தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் கைப்பாவையாக இருந்ததே அதற்கு காரனம் என பேசப்பட்டது.

  இந்த விஷயம் தலைமைக்கு தெரிந்ததும், அ.தி.மு.க.ஆட்சியில் அமைச்சராக இருந்த பழனியப்பனை ஸ்கெட்ச் போட்டு திமுகவுக்கு தூக்கி கொண்டு வந்துவிட்டனர்.

  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தர்மபுரியில் பொறுப்பாளராக நியமித்த பின்னரே இது சாத்தியமானது.

 அப்படியிருக்க  முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்த உடனே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு தலைமை எந்த பொறுப்பையும் வழங்காமல் வைத்திருந்தது.

  ஆனாலும் கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர் தனக்கான பலத்தை நிரூபித்து வருகிறார். கடந்த மே 14-ம் தேதி கடத்தூர் பேரூராட்சியில் நடந்த திமுக ஓராண்டு சாதனை கூட்டத்தில் தனது அனல் பறக்கும் பேச்சால் அதிமுக, பாஜகவை கடுமையாக சாடியதை திமுகவினர் அதிர்சி விலகாமல் ரசித்தனர்.

  அப்படியிருக்க தடங்கம் சுப்பிரமணிக்கு மாற்றாக பழனியப்பனுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.