அமைச்சர் துரைமுருகன் மீது அவதூறு பரப்பியவர் ரிலீஸ்!

பா. ரமேஷ் ஆனந்தராஜ்,
அமைச்சர் துரைமுருகனை அவதூறாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த போலீசார் பொள்ளாச்சிக்கு சென்று அவரை கைது செய்து அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த ஐந்தாம் தேதி அன்று சிறையில் அடைக்கப்பட்ட அருண் இன்று ஜாமினில் வெளியில் வந்தார்.
அவரை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்