மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துகிறோம்:- முதலமைச்சர் திருவண்ணாமலையில் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
நாங்கள் மதத்தை வைத்து கட்சி நடத்தவில்லை, கட்சியானாலும், ஆட்சியானாலும் மக்கள் முன் நின்று ஆட்சி நடத்துகிறோம். கட்சி நடத்துகிறோம் என்று திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் கலந்த கொண்ட முதலமைச்சர் ரூ.340 கோடி மதிப்பிலான 246 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, 1.74 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, செஞ்சிமஸ்தான், சட்டபேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, எம்.பி.சி.என் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்கர், தி.சரவணன், ஓ. ஜோதி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இ.ஆ.ப., மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
விழாவில் அவர் பேசியதாவது, அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றது. கருணாநிதி முயற்சியால், கோயில் கட்டி காத்தது திமுக அரசு. மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இது தெரியாது. நீர்மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இதேபோன்ற சாதனையை அனைத்து மாவட்டங்களும் செய்ய வேண்டும். அருணாசலாஸ்வரரை தரிசனம் செய்யவும்,கிரிவலம் செல்லவும் ஆயிரகணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தரும்.
மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் ஆன்மிகவாதிகள் அல்ல. ஆன்மிக போலிகள்.வியாதிகள்.நாங்கள் மதத்தை வைத்து ஆட்சி நடத்தவில்லை. மக்கள் முன்வைத்து கட்சி ஆட்சி நடத்துகிறோம்.கோவிலுக்கு திருப்பணி செய்வது திராவிட மாடலா என கேட்கிறார்கள்.அனைத்து துறை வளர்ச்சி பெறுவது தான் திராவிட மாடல்ஆன்மிகத்தின் பெயரால், அரசியல் நடத்த முயற்சி செய்கிறார்கள்.
ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. மனிதர்களை பிளவுபடுத்தும கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. அறநெறியை கொண்ட ஆட்சி நடத்து வருகிறோம்.
போலியான பிம்பங்களை கட்டமைப்பவர்களுக்கு பொய்களும் தான் தேவை. மக்களுக்கு தேவையான கல்வி, வேளாண்மை புதிய தொழில் தமிழகம் தமிழினமும் முன்னேற சிந்தித்து செயல்படுவது தான் திராவிட மாடல்.
அறிவார்ந்த யாரும் அரசுக்கு ஆலோசனை சொல்லலாம். அறிவார்ந்தவர்கள் பேசுவதை மட்டுமே கேட்க வேண்டும். இது தேர்தல் காலம் அல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலம். பொய், புரட்டு கூறுபவர்கள் குறித்து ஐ டோன்ட் கேர்'. மக்களும் அப்படியே நகர வேண்டும். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் மக்கள் பணியாற்றி வருகிறேன். கோப்புகள் முடங்கி விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறேன்.
ஆன்மிகத்தின் பெயரில் மனிதர்களை சாதியால், மதத்தால், பிளவுபடுத்துகிறார்களே அவர்களுக்கு நாங்கள் எதிரிகள். மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது.
அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூடகருத்துகளை முதுகில் தூக்கிக்கொண்டிருக்கக்கூடிய சிலருக்கு போலியான பிம்பங்களை கட்டமைக்க வேண்டுமென்றால் உளறல்களும் பொய்களும்தான் தேவை" என்று ஸ்டாலின் பேசினார்.