பலான புகாரை திரும்ப பெற்ற நடிகை! வழக்கிலிருந்து எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர்!!

பலான புகாரை திரும்ப பெற்ற நடிகை! வழக்கிலிருந்து எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர்!!

 ஜி.சாந்தகுமார்,

  நடிகை சாந்தினிரென்பவர்,  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களை அளித்தார்.

  கூடவே மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்தப் புகாரில் குறிப்பிட்ட்டிருந்தார்.

  அதனடிப்படையில், சென்னை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.   

  கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே இந்த புகார் கிளம்பியதால் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

  இது தொடர்பாக நமது லைவ் லுக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பேட்டி வெளியானதை.

 அந்த காலகட்டத்தில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட கோர்ட்டு, பின்னர் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து அவரை சிறையில் அடைத்தனர்.

 இதையடுத்து, அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

  அப்படியிருக்க இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

  எது எப்படியே பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது நிரந்தரமாக இருந்தால் சரி.