சந்தன மரம் இன்னும் இருக்கா?

சந்தன மரம் இன்னும் இருக்கா?

கு.அசோக்,

 வேலூரில் நள்ளிரவில் பரப்பரப்பு சந்தன மரத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்

 வேலூர்மாவட்டம், காட்பாடியிலிருந்து சுமார் 20 கிலோ எடை கொண்ட சந்தன மரத்தை வெட்டி ஆரணிக்கு கொண்டு செல்வதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன் பேரில் இரவு பணியிலிருந்த வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரஜினி காவலர்களுடன் சென்று   வேலூர்  ஊரிஸ்  கல்லூரி அருகில் 20கிலோ எடைக்கொண்ட சந்தன மரமும் அதற்காக பயன்படுத்திய கத்தி மற்றும் இரண்டு சக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்தார்கள். 

  ஆரணியைச் சேர்ந்த ராஜசேகர் (28) கைது செய்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டனர்