மின் வேலி கம்பியை மிதித்த ஐந்து மாடுகள் உயிரிழப்பு!

மின் வேலி கம்பியை மிதித்த ஐந்து மாடுகள் உயிரிழப்பு!

 ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த ஐந்து மாடுகள் உயிரிழப்பு.

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரீகம் பகுதியில் உள்ள செயல்படாமல் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையின் நிலம் உள்ளது

  அதில் அதே பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரது இரண்டு காளை மாடுகள் மற்றும் ஒரு பசுமாடு, ஒரு கன்று குட்டியும் அதே போல சிகாமணி என்பவர் பசுமாடு ஒன்றும் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்து இருந்த மின்சார கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே 5 மாடுகளும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

  இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார துறையினருக்கு தகவல் அளித்து மின்சாரத்தை துண்டித்து பின்னர் உமராபாத் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மின்சார வேலி அமைக்கப்பட்டதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.