கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை-கொலை செய்யப்பட்ட தினம்-இறுதி போர்-கூட்டணி தர்மம்- பரபரப்பு விமர்சனங்கள்!

கொலை குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை-கொலை செய்யப்பட்ட தினம்-இறுதி போர்-கூட்டணி தர்மம்- பரபரப்பு விமர்சனங்கள்!

 ம.பா.கெஜராஜ்,

 உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் மீது சமீபத்தில் வெளியான தீர்ப்பு பல்வேறு விவாதங்களை எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது.

 கொலை குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலை-கொலையானவருக்கு நினைவு தினமும், மேலும் இலங்கையில், தமிழர் பகுதியில் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடந்த இறுதி போர் போன்றவையெல்லாம் ஆண்டு தோறும் மே மாதத்தில் ஆகியவை அடுத்தடுத்து வரும்படி அமைந்துவிட்டது.

  ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து படிப்படியாக இறங்கி தற்போது விடுதலை நிலைக்கு வந்துளளவரை குட்டி குட்டி தமிழ் அமைப்புகள் கையில் ஏந்தி, அவர்களது மன மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 31 ஆண்டுகள் சிறைவாசத்தை துக்கமாக சொல்லிக் கொள்கிறார்கள்.

  இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட 31 ஆவது நினைவுதினத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள  ரஜீவ்காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

     என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- அயல் நாட்டிலிருந்து ராகுல் காந்தி டுவீட் செய்திருக்கிறார்.

  அப்படியிருக்க ராஜிவ் காந்தியின் உயிர் பறிபோன இடமான சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கே.எஸ்.அழகிரி, மாலையிட்டு நினைவாஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுமையில், "ராஜீவ்காந்தி தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரர். இந்தியர்களுக்காக பல்வேறு தியாகங்களை செய்யத் தயாராக இருந்தவர். ராஜீவ்காந்தி இறந்தபோது கண்ணீர் ஆறாக போனது. தற்போது கொலையாளிகளை விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்க்கும்போது இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.

  குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும் என்ற அவர், குற்றவாளி என்பவர் குற்றவாளிதான், கடவுள் ஆக முடியாது என்றார்.

   பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடுபவர்கள் திமுக மற்றும் அதிமுகவினர் தான். ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

   அதற்கு அவர், தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பே எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் 7 பேர் விடுதலையை வலியுறுத்தினார்கள். கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை தெரிந்து கொண்டு தானே நாங்களும் கூட்டணி வைத்தோம். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணி கட்சிகளின் கொள்கைகள் வேறாக இருந்தாலும் கூட்டணிக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்று பதிலளித்தார். அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்கிற கதையாகத்தான் அவர் சொன்னார்.

 

இந்நிலையில் எந்த அமைப்பிலும் ஒட்டோ உறவோ இல்லாத தமிழ்மக்கள் பலர் சமூக வலைதளங்களில் விடுதலையை மையப்படுத்தி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 கோகிலவாணி வெறும் 10 வயது குழந்தை!

 சிவராசன் தன,பேரறிவாளன், நளினி, முருகன், சுபா உள்ளிட்டவர்கள் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக கருதப்பட்டவர்கள்.லிவர்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் துண்டு துண்டாகி இறந்தவர்களில் கோகிலவாணி என்பவரும் ஒருவர். அப்போது அவளுக்கு வயசு வெறும் 10 தான்...!

 அருகில் எமன் வடிவில் தனு நிற்பது தெரியாமல் ராஜீவ்காந்தி பற்றி கவிதை வாசிக்க காத்திருந்த போது கோகிலவாணி வெடித்து சிதறினாள்.

 

நெல்சன் மண்டேலாவுக்கூட இப்படி வரவேற்பு இல்லையே?

    க.பூரணி, தென்காசியிலிருந்து, காலை முன்னணி தினசரி ஒன்றிற்கு மெயில் மூலம் கீழ்கண்ட பதிவை அனுப்பிவைத்துள்ளார்.

 அதில், 1912 டிசம்பர், 24- ல் , கேரள மாநிலம் கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையாகி வருகிறார் ஒருவர், அவரை வரவேற்க , ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்தார்  விடுதலையாகி வரும் நபர் செய்த குற்றம் , ஆங்கிலேயருக்கு எதிராக சரக்கு கப்பல் விட்டது . அவர் வேறு யாருமல்ல நாட்டுக்காக தன் சொத்தை இழந்து , இறுதியில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் , மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து வறுமையில் வாடிய , செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் தான்

 . அவரை வரவேற்க வந்திருந்தவர், அவரின் நண்பர் சுப்பிரமணிய சிவா.

  சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, என்னை மட்டுமின்றி, நியாயம், நேர்மை மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரின் மனதையும் , வேதனையில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 அது வேறு ஒன்றுமில்லை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் விடுதலைக்கு, தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் தான்.

    தன் இன மக்களுக்காக போராடி , 27 ஆண்டுகள் சிறையில் இருந்த , நெல்சன் மண்டேலாவிற்கு கூட இப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை.

   ஒரு கொலை குற்றவாளிக்கு,ஏதோ நாட்டு மக்களுக்காக போராடி சிறை சென்று , விடுதலை அடைந் ததை போல அத்தனை வரவேற்பு. அவரை ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

   தவறு செய்தது தன் மகனே ஆனாலும், அவனை தேர்க்காலில் இட்டு தண்டனை வழங்கிய மனு நீதிச் சோழன், தான் தவறாக தீர்ப்பு கொடுத்து விட்டோம் என்பதை அறிந்த அடுத்த நொடியே, ' நானே கள்வன் ' எனக்கூறி , உயிரை விட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் போன்றவர்கள் வாழ்ந்த தமிழகத்தில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கு குற்றவாளியை , ஏதோ தியாகம் செய்து சிறைக்கு சென்று வந்தவர் மாதிரி சித்தரிக்கின்றனர்.

 இனி, அவருக்கு, 'பாரத ரத்னா' விருது கொடுக்க வேண்டும்; ஏன் ' நோபல் பரிசே'கொடுக்க வேண்டும் என , பரிந்துரை செய்தாலும் செய்வர்.

  ஏனெனில், நாட்டுக்காக அவ்வளவு,' தியாகங்களை' பேரறிவாளன் செய்துள்ளார். அத்துடன், அவரை ஒரு புனிதராக்கி , வரலாற்று பாடப் புத்தகத்திலும் இடம் பெறச் செய்து விடுவர்.

  இப்படி கொண்டாடுவது , தவறு செய்பவர்களுக்கு, ஒரு தவறான முன்னுதாரணமாகி விடாதா? உண்மையிலேயே தவறு செய்யாமல் , எத்தனையோ நிரபராதிகள் விசாரணை கைதி என்ற பெயரில் , தங்கள் வாழ்க்கையை சிறையில் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி கவலைப்படாமல் , கொலை குற்றவாளிக்கு , அரசியல்வாதிகள் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம் .

  தமிழக மக்களை நம்பி , நம் மாநிலத்திற்கு வந்த , முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையானதற்கு , நாம் ஒவ்வொருவரும் குற்ற உணர்வில் தலைக்குனிய வேண்டுமே தவிர , குற்றவாளியை காப்பாற்ற போராடக் கூடாது.

  ராஜிவுடன் எத்தனை பேர் , வாழவேண்டிய வயதில் , தங்கள் உயிரை நீத்தனர்?  எத்தனை பேர் நிரந்தர ஊனமாகி இன்று வரை அவஸ்தையை அனுபவிக்கின்றனர்.

  இதை எல்லாம் மறந்து, பேரறிவாளன் விடுதலையை , தியாகியின் விடுதலையை போல கொண்டாடுவது எந்த வகையில் நியாயம் ? இன்று நீதிமன்றத்திலிருந்து விடுதலை அடைந்திருக்கலாம். ' அரசன் அன்றே கொல்வான்; தெய் நின்று கொல்லும் 'என்று கடுமையாகிஅ விமர்சனம் செய்தார் என செய்தி வெளியாகியிருக்கிறது.

இதே போல் காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவரான அனிசியா என்பவரும் பேரரிவாளனின் விடுதலையை கண்ணாபின்னாவென்று விமர்சனம் செய்து வருகிறார். இவர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விபத்தில் சிக்கி கைவிரல்கள் மூன்றை இழந்தவர். உடல் முழுக்க குண்டுகள் இன்னமும் புதைந்துள்ளன.