சிறுமியின் கருமுட்டை சகஜமாக விற்பனை!கொழிக்கும் புரோக்கர்கள்!

சிறுமியின் கருமுட்டை சகஜமாக விற்பனை!கொழிக்கும் புரோக்கர்கள்!

  வே.சீனிவாசன், 

 சிறுமியின் கருமுட்டை சகஜமாக விற்பனை செய்யப்பட்டதை அடுதுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் தூக்கத்திலிருந்து கண்விழித்துள்ளார்கள்.

  சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த பிரபல ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமியிடம் இருந்து சட்டவிரோதமாக கருமுட்டைகள் தானம் பெற்றதாக புகார் எழுந்தது.

  இதன் காரணமாக 16 வயது சிறுமியின் தாயார் உள்பட 4 பேர் இந்த விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 சிறுமியின் புகாரின்படி, அவரின் தாய் இந்திராணி, வளர்ப்புத் தந்தை சையது அலி, இடைத்தரகர் மாலதி, அந்த சிறுமியின் ஆதார் அட்டையை மாற்றிக்கொடுத்த ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

  16 வயது சிறுமியிடமிருந்து இதுவரை எட்டு முறை கருமுட்டை எடுக்கப்பட்டிருக்கிறது.

கருமுட்டை விற்பனையில் இந்திராணி, மாலதி ஆகிய இருவரும் ஏற்கெனவே ஈடுபட்டுவந்த நிலையில், இந்திராணி தன் மகளையும் இந்த கொடுமைக்கு ஆளாக்கியிருகிறார்.

இந்த விவகாரத்தில் புரோக்கர் மூலம் கருமுட்டை விற்பனை நடந்து இருப்பதால் முதலில் அவர்களை நோக்கி அரசு அலுவலர்கள் விசாரணையை நகர்த்தியுள்ளார்கள்.

  மேலும் தற்போது ஒரு சிறுமியின் விவரம் மட்டுமே வெளியில் தெரிய வந்துள்ள சூழலில் இதுபோன்று கருமுட்டை விற்பனையில் வேறு சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.