மானம் காக்கும் இலவச துணிக்காக காக்காய் குருவியாய் செத்த ஏழை மூதாட்டிகள்!

 அ.தேவி,

வாணியம்பாடியில் இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட டோக்கன் வாங்க வந்த 4 மூதாட்டிகள் உயிரிழப்பு

 பண்கள் மற்றும் மூதாட்டி உட்பட 12 பேர் காயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர்  ஐயப்பன்.  இவர் தை பூசத்திருவிழாவிற்காக இலவசமாக வேட்டி சேலை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்..

 இந்நிலையில் இந்த வருடமும் இலவச வேட்டி சேலை நாளை வழங்க இன்று அதற்கான டோக்கன்களை வாணியம்பாடி வாரச்சந்தை அருகே உள்ள இடத்தில் வழங்கினார்.

   அப்பொழுது அங்கு அதிக அளவு பெண்கள் மற்றும் மூதாட்டிகள் ஒன்று கூடியதால்  கூட்ட நெரிசலில் சிக்கி 12 க்கும் மேற்பட்ட பெண்கள்  மூதாட்டி காயமடைந்துள்ளனர்.     உடனடியாக அவர்களை  மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..

 இந்நிலையில் குரும்பட்டி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள்,  அரப்பாண்ட குப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி,  ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த நாகாம்மாள், சின்னம்மாள் ஆகிய 4  மூதாட்டிகள்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

 இதனை தொடர்ந்து வாணியம்பாடி வட்டாச்சியர் சம்பத் கோட்டாச்சியர் பிரேமலதா திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 மேலும் ஐயப்பன் மீது  வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்..

 இலவச சேலை வாங்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிகழ்வு வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதநேயம்.

  இந்த பரிதாப சம்பவத்தை அறிந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மேற்படி இறந்த நான்கு பேரின் ஈமச்சடங்கு செலவிற்காக அவரது சொந்த பணத்திலிருந்து 1லட்சம் ரூபாயை உறவினர்களிடம் வழங்க ஏற்பாடு செய்தார்.

  அதன்படி, வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா மூலம் தலா ரூ 25,000/ வழங்கப்பட்டது.  

குறிப்பு:- சாதாரண வேட்டி சேலைக்காக கையேந்தும் அளவுக்கு இன்னமும் நம் தேசத்தில் வருமை ஒட்டிக்கொண்டிருப்பது வேதனை. அதிலும் வேதனை யாதெனில் காக்காய் குருவியை போல் எம் பாட்டிமார்கள் சுருண்டு விழுந்து செத்திருப்பது, இதயத்தை நொறுக்கிவிட்டதே ரொம்பவே வேதனை. அதுவும் மானம் காக்கும் துணிமணிகளுக்காக...ச்ச்சே?