சொத்தை அபகரிக்க மிரட்டும் திமுக எம்.பி!கலெக்டர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற காவலர்! இராஜபாளையத்தில் பரபரப்பு!

சொத்தை அபகரிக்க மிரட்டும் திமுக எம்.பி!கலெக்டர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்ற காவலர்! இராஜபாளையத்தில் பரபரப்பு!

ம.பா.கெஜராஜ்,

  இராஜபாளையம் தொகுதி தேவதானம் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாஸ்தா கோவில் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணை திறக்கப்பட்டது.

 இன்று (21.11.2021) மாலை 5.30 மணியளவில் சாஸ்தா கோவில் அணையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் அணையை  திறந்து வைத்தனர்.

  இந்நிகழ்வில் திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் கழக நிர்வாகிகள் அதிகாரிகள் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு விட்டு திரும்பிய மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தின் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

 அவர் அங்கு காவலாளியாக பணிபுரிந்த ஊழியர் கணேஷ்குமார் என்பது விசாரணையில் தெரியவந்த்து.

  தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி தனுஷ் எம்.குமார் தனது 50 லட்சம் மதிப்பிலான விவசாய நில சொத்தினை ஆக்கிரமிப்பு செய்து தன் பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் புகார் சொன்னார்.

 அந்த காரணத்தினாலாயே மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாகனம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீ குளிக்க முயன்றாராம்.

அடேங்கப்பா எம்.பி.தான் போலிருக்கு.!