பேர்னாம்பட்டு நகராட்சியில் கோடிகளில் ஊழல்! மீட்டரே ஓடலை அப்புறம் எப்புடி?

த.நெல்சன்,
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் கடந்த 2011- 2012 வரை ரூபாய் 90 லட்சம் (90,00000) செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கி விட்டதாக கூறி ரூபாய் (90,00000 லட்சங்களை) போலி பில் செய்து பொதுமக்களின் வரிப்பணத்தின் நகராட்சி நிதி அமுக்கப்பட்டிருக்கிறது.
செயல்படாத விசிசி சென்டர்களின் ணிஙி ழிளி: 476-003-1208 476-002-25-35 473-009-523
2018 - 2019 முதல் இன்று நாள் வரை ஒரு யூனிட் மின்சாரம் செலவாகவில்லை.
இந்த செயல்படாத திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூபாய் 4 கோடியே 25 லட்சம் (4,25,00000) ஆகும். இந்த திட்டத்தில் போலி பில்கள் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் (2,50,00000).
பொதுமக்கள் மேற்படி விஷயங்களை அறியும் வகையில் சமூக ஆர்வலர் யூனுஸ் என்பவர் இது குறித்த தகவல்களை சேகரித்து வெளியிட்டு வருகிறார்.
இது குறித்து யூனுஸ் கூறூகையில் நகரமன்ற தேர்தல் முடிந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பொது மக்களின் குறைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. புதிய தார் ரோடு மற்றும் சிமெண்ட் ரோடு வரும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு குப்பை மலைகள், குப்பைகள் மூலம் ரோடுகள் தான் ஆகியுள்ளது.
பேர்ணாம்பட்டு நகராட்சியில் அனைத்து ஒப்பந்ததாரர்களை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்.
அப்போதுதான் பேர்ணாம்பட்டு நகராட்சியில் கடந்த 2007 முதல் 2023 பிப்ரவரி மாதம் வரை நடந்த ரூபாய் 150 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட சூப்பர் ஆற்றல் படைத்த முதல் குற்றவாளிகள் முதல் கடைசி குற்றவாளிகளை கண்டு அறியப்படுவர்.
செய்யாத வேலைக்கு பணி முடித்ததாக போலி பில்கள் மூலம் நகராட்சி நிதி வளத்தை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல்களை நீதியின் முன் நிறுத்தி நகராட்சி நிதி வளத்தை மீட்டெடுக்க முயல்வேன்.
2007 முதல் 2023 வரை பணியாற்றிய ஆணையாளர்களை மிரட்டி அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நமது நகராட்சி நிதிகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது ஆணையராக பணியாற்றி வரும் செல்வி சுபாஷினி நகராட்சி நிர்வாகத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் நிலையில் கொள்ளைக்கு பழக்கப்பட்டவர்கள் திருந்த மறுக்கிறார்கள்.
இந்த ஆணையாளர் போலவே கடந்த காலங்களில் 42 நாட்கள் மட்டும் பணியில் இருந்த திருமதி மகேஸ்வரி சிறந்த நிர்வாகி ஆவார்.
இப்படி நேர்மையானவர்களை பணியாற்றவிடாமல் தடுக்கும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்கிறார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து ஆணையர் சுபாஷினியிடம் விவரம் அறிய முற்பட்டோம். நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன் என்றார் அவர்.