கலெக்டரை கண்டதும் ஓட்டமெடுத்த கள்ளச்சாராய பார்டிகள்! அதிர்ச்சியில் டி.எஸ்.பி.!

Ma.ba.Gajaraj,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டத்தில் பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட சாத்கர் மலையினை நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, மேலும் மலைக் குன்றுகள் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக தப்பி ஓடியவர்களை பிடிக்க காவல்துறையின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
"டி.எஸ்.பி. ஒருவரின் ஆசியுடன் தான் அங்கு கள்ளச் சாராயமே காய்ச்சப்படுகிறதாம், அப்படியிருக்க கலெக்டரே மலையேறி கள்ளச்சாராய பார்டிகளை விரட்டியதால் சம்மந்தப்பட்ட டிஎஸ்பி அதிர்ச்சியடைந்துவிட்டாராம்".
இந்த ஆய்வின் போது, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ்செயன், வட்டாட்சியர், மண்டலத்துணை வட்டாட்சியர், காவல் உதவி ஆய்வாளர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் வட்டத்தில் தலைமை தபால் நிலையம் எதிரே மழை நீர் மற்றும் கழிவுநீர் தெருவில் தேங்கியுள்ளதை நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
மேலும், பேர்ணாம்பட்டு வட்டம், பத்தலப்பல்லி கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ்செயன், வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.