நித்தியானந்தாவை கொல்ல ஸ்லோ பாய்சன்:- அய்யோ அம்மா என்று கதறும் சீடர்கள்!

நித்தியானந்தாவை கொல்ல ஸ்லோ பாய்சன்:- அய்யோ அம்மா என்று கதறும் சீடர்கள்!

ஜி.சாந்தகுமார்,

   திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சாமி நித்தியானந்தாவை, ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்ல ரகசிய முயற்சி நடந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

   கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள பிடதி கிராமத்தில் ஆசிரமம் அமைத்து சர்ச்சையில் மாட்டிக் கொண்டவர் சாமி நித்யானந்தா. ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த அவர் மீது பெண்களுடனான கூடா நட்பு, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டதில் பிரச்சனை என அவரை துரத்திக் கொண்டே இருந்தது.

 இந்த விவகாரங்களைத் தொடர்ந்து அவர் மீது புகார்கள் குவிந்தன. அப்படியிருக்க அவர் நாட்டில் இருந்தே வெளியேறினார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி, அங்கு வசிப்பதாக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

 இருப்பினும், கடந்த ஓராண்டாக அவரது செயல்பாடுகள் குறைந்தன. பல மாதங்களாக, அவரது நேரடி வீடியோக்கள் எதுவும் வரவில்லை. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.

  ஆரோக்கியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு, திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதற்கு, மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சைக்காக இலங்கை அரசிடம் அவர் தரப்பில் அனுமதி கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

   நித்தியானந்தாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கவே அவருக்கு ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.